Posts

Showing posts from May, 2020

Two verses that allah wrote in his hand 2000 years before he created all creatures

Image

சையதினா அலி ரலியல்லாஹு அன்ஹு

#அறிவின் தலைவாயில் அலி (ரலியல்லாஹூ அன்ஹூ) கர்ரமல்லாஹு வஜ்ஹஹு. #ரமலான் 21-ல் ஹழ்ரத் அலி கர்ரமல்லாஹு வஜ்ஹஹுஅவர்களின் நினைவு தினம். #இன்று இஸ்லாத்தின் நான்காம் கலீபாவும், நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பெரிய தந்தையின் மகனாரும், #கண்மணி ஹபீப் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் மகளார் சுவனத்து பெண்களின் தலைவியாம் அன்னை ஃபாத்திமா  ரலியல்லாஹூ அன்ஹா அவர்களின் கணவரும், சுவனத்து இளைஞர்களின் தலைவர்களான இமாம் ஹசன் ரலியல்லாஹூ அன்ஹூ..., இமாம் ஹுசைன் ரலியல்லாஹூ அன்ஹூ... ஆகியோரின் தகப்பனாரும், சூபியாக்கள் எனப்படும் ஆன்மீக குருமார்களின் முதன்மை ஆசிரியரும்,,, உலகத்தில் உள்ள சாதாத்மார்கள் எனப்படும் நபிகளாரின் வாரிசுகளின் பாட்டனாரும், மிகுதியான வலிமார்களின் பாட்டனாருமான ஹழ்ரத் அலி கர்ரமல்லாஹு வஜ்ஹஹுஅவர்களின் உரூஸ் தினம் ஆகும்...!! இவர்கள் புனித காஃபாவில் பிறந்தார்கள். முதலில் பார்த்தது நபிகளார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை. பிறந்து கண் திறந்த போது முதலில் பார்த்தது நபிகளார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் இவர்களை பார்க்க சென்ற போதுதான் கண்திறந்தார...

இறைவனின் அருட்கொடை

                  இறைவனின் அருட்கொடை அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர் அவர்களே! கியாமத் நாளில் எங்கள் இறைவனை நாங்கள் காண முடியுமா? என்று சிலர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'மேகம் மறைக்காத முழு நிலவைக் காண்பதில் நீங்கள் ஜயம் கொள்வீர்களா?' என்று கேட்டார்கள். நபித்தோழர்கள் 'இறைத்தூதர் அவர்களே! இல்லை' என்றார்கள். மீண்டும் நபி(ஸல்) அவர்கள், 'மேகம் மறைக்காத சூரியனைக் காண்பதில் நீங்கள் ஜயம் கொள்வீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கும் நபித்தோழர்கள் 'இல்லை' என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'இதே போல்தான் நீங்கள் உங்களின் இறைவனைக் காண்பீர்கள்' என்று கூறினார்கள். தொடர்ந்து, 'கியாமத் நாளில் மக்களெல்லாம் ஒன்று திரட்டப் பட்டதும் யார் எதனை வணங்கினார்களோ அதைப் பின் பற்றிச் செல்லட்டும்' என்று இறைவன் கூறுவான். சிலர் சூரியனைப் பின்பற்றுவர். வேறு சிலர் சந்திரனைப் பின்பற்றுவர். மற்றும் சிலர் தீய சக்திகளைப் பின்பற்றுவர். இந்த சமூகம் முனாஃபிக்குகள் உட்பட அதே இடத்தில் நிற்பர். அப்போது இறைவன் அவர்களை நோக்கி 'நானே உங்களு...

புனித_லைலதுல்_கத்ர்_இரவின்_சிறப்பு

புனித_லைலதுல்_கத்ர்_இரவின்_ சிறப்பு லைலதுல் கத்ர் இன்ன இரவுதான் என்பதில்  ஏராளமான கருத்து வேறுபாடுகள் கூறப்பட்டுள்ளன. அது ஆண்டில் ஓர் இரவென்றும், பராஅத் இரவென்றும், றமழானில் ஓர் இரவென்றும், றமழான் 27ம் இரவு என்றும் பல கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. இவற்றில் நம்பிக்கையான  சொல் றமழான் இருபதுக்கு மேல் ஒற்றைப்படையாக வரும்  நாட்களில் உள்ள  இரவுகளில்  ஒரு இரவென்றும், கூறப்பட்டிருப்பதால் றமழான் மாதத்தின்  கடைசிப்பத்து நாட்களும்  இஃதிகாப் இருப்பது மிக சிறப்பானதாகும். ♣️ ரமளான் மாதத்தில் ஓர் இரவு உள்ளது. அந்த ஓர் இரவானது ஆயிரம் மாதங்களை விடச் சிறப்பானதாக அமைந்துள்ளது.மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது.(அல்குர்ஆன் 97:1-5) கீழ் வரும் ஹதீஸ்கள் லைலதுல் கத்ர் சம்பந்தமாக ஸஹீஹான அறிவிப்புகள் ஊடாக இடம் பெற்ற ஹதீஸ்களாகும்….   ♣️ 2015 حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْه...

பிறை பற்றிய தெளிவான விளக்கம்

நோன்பு வைப்பதற்கும், இரு பெருநாள் கொண்டாடுவதற்கும் உலகில் ஏதோ ஒரு பகுதியில் பிறை பார்த்தால் போதுமா? அல்லது அந்தந்த பகுதியில் பிறையை பார்த்தாக வேண்டுமா? ♣ பிறை தொடர்பாக சமூகத்தில் உள்ள கருத்து வேறுபாடுகள் இஸ்லாத்தில் உள்ள சட்டதிட்டங்கள் அனைத்தையும் தெளிவுபடுத்தவே நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அனுப்பப்பட்டார்கள். மார்க்கத்தில் பிறையையும் முடிவு செய்வது எப்படி என்பதை அல்லாஹ்வும், அவனது ஹபீப் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தெள்ளத்தெளிவான வாசஹங்களினால் தெளிவு படுத்தியுள்ளார்கள். அவைகளை பின்வருமாறு தெளிவாக விளங்கியுள்ளோம் ஆனாலும் வழிகேடர்களின் சூழ்ச்சியின் காரணமாக பிறை பற்றி முஸ்லிம்கள் மத்தியில் பிரபலமான மூன்று கருத்து வேறுபாடுகள் ஊடுருவி விட்டது. 1) சர்வதேச உலகில் குறித்த ஒரு பகுதியில் பிறை தென்பட்டு அது உரிய சாட்சிகள் மூலம் உறுதி செய்யப்பட்டால் உலகம் முழுவதிலும் உள்ள முஸ்ஸிம்கள் அனைவரும் அதன் அடிப்படையில் அடுத்த மாதம் பிறந்து விட்டது என்று முடிவு செய்து) நோன்பு நோற்பது மற்றும் பெருநாள் கொண்டாடுவது). பிறை தென்படா விட்டால் அது அம்மாதத்தின் முப்பதாம...

இஸ்லாத்தின் பார்வையில் (கொரோனா வைரஸ் / Covid 19) போன்ற தொற்று நோய்கள் உண்டா?

இஸ்லாத்தில் தொற்று நோய் உண்டா? உலக நாடுகளைப் பீதியில் ஆழ்த்தும் தொற்று நோய்கள் (கொரோனா நோய், பறவைக் காய்ச்சல் மட்டுமல்லாது) பல்வேறு நோய்களுக்குக் காரணமான வைரஸ்கள் காற்றிலோ, தண்ணீர் மூலமாகவோ அல்லது வேறு ஏதேனும் வகையிலோ பரவுவது அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ♦️ அல்லாஹ்வின் தூதர் (ஸல்லலாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், "தொற்று நோய் கிடையாது. ஸஃபர் பீடை கிடையாது. ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது'' என்று கூறினார்கள். அப்போது கிராமவாசி ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே! மணலில் மான்களைப் போன்று (ஆரோக்கியத்துடன் துள்ளித்) திரியும் என் ஒட்டகங்களிடம் சிரங்கு பிடித்த ஒட்டகம் வந்து அவற்றுக்கிடையே கலந்து அவற்றையும் சிரங்கு பிடித்தவையாக ஆக்கி விடுகின்றனவே! அவற்றின் நிலை என்ன?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்லலாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், "அப்படியென்றால் முதல் ஒட்டகத்திற்கு (அந்த நோயைத்) தொற்றச் செய்தது யார்?'' என்று திருப்பிக் கேட்டார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) (நூல்: புகாரி 5707, 5717) இந்த ஹதீஸில் தொற்று நோய் கிடையாது என்...

ஏழு செயல்கள் எவை

நாம் செய்யும் ஏழு செயல்கள் மூலம் கிடைக்கும் பலன்கள் ....!!!! ஏழு செயல்களால் வறுமை சீக்கிரம் வந்து விடும் (1) வேக வேகமாக தொழுவது. (2) நின்று கொண்டு சிறு நீர் கழிப்பது. (3) சிறு நீர் கழித்த இடத்தில் ஒலு செய்வது. (4) நின்று கொண்டு தண்ணீர் குடிப்பது. (5) விளக்கை வாயால் ஊதி அனைப்பது. (6) நகத்தை பல்லால் கடிப்பது. (7) அணிந்திருக்கும் ஆடையைக் கொண்டு முகத்தை துடைப்பது........ ஏழு செயல்களால் செல்வச் செழிப்பு ஏற்படும். (1) குர்ஆன் அதிகமாக ஓதுவது. (2) ஜந்து நேரம் விடாமல் தொழுவது. (3) அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவது. (4) ஏழைகளுக்கு உதவி செய்வது. (5) பாவங்களிலிருந்து விலகிக் கொள்வது. மற்றும் பாவ மன்னிப்புத் தேடுவது. (6) பெற்றோர்கள் மற்றும் உறவினர்களோடு நல்ல முறையில் சேர்ந்து வாழ்வது. (7) காலையில் சூரா யாசீன் ஓதுவது. மாலையில் சூரா வாகிஆ ஓதுவது.  வறுமையை உண்டாக்கக்கூடிய அந்த ஏழு செயல்கலில்யிருந்து அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக.ஆமீன் இன்னும் செல்வச் செழிப்பை ஏற்படுத்தும் ஏழு செயல்களை செய்யக்கூடிய பாக்கியத்தை தந்து அருள்புரிவானாக. ஆமீன் ஆமீன் யாரப்பல் ...

ஓர் அழகிய பிரார்த்தனை

வாழ்நாள் முழுதும் கேட்க வேண்டிய பாவ மன்னிப்பிற்கான ஒரு அருமையான துஆ*                 நோன்பு திறக்கும் போது அனைவரும் இந்த துஆவை தினமும் கேட்கவும். நீங்கள் தனியாவோ அல்லது குடும்பத்துடனோ இந்த துஆவைக் கேளுங்கள். இந்த துஆவை கேட்கும் உங்களுக்கும் இதை எத்திவைத்த எனக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள்புரிவானாக ஆமீன்..! *அவூதுபில்லாஹி மினஷ்ஷைதானிர்ரஜீம்..! பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்..!* அல்லாஹ் அக்பர், அல்லாஹ் அக்பர், அல்லாஹ் அக்பர் வலில்லாகஹில் ஹம்து. அல்லாஹும்ம ஸல்லி அலா ஸய்யதினா வநபிய்யினா வஹபீபினா வஷபீஇனா வமவ்லானா முஹம்மதின் வஅலா ஆலிஹி வஸஹ்பிஹி வபாரிக் வஸல்லிம் அலைஹி..! யா அல்லாஹ்..! நாங்கள் என்ன புண்ணியம் செய்தோம் நீ எங்களை முஸ்லீமான ஆண், பெண்களுக்குப் பிறக்கச் செய்தாய்..! யா அல்லாஹ்..! நாங்கள் என்ன நன்மை செய்தோம் நீ எங்களை ஊனமில்லாமல் பிறக்கச் செய்தாய்..! யா அல்லாஹ்..! நாங்கள் பாவிகளாக இருந்தும் நீ எங்களுக்கு உணவளிக்கிறாய்..! யா அல்லாஹ்..! நாங்கள் தவறுகள் செய்பவர்களாக இருந்தும் நீ எங்கள் மீது இரக்கம் காட்டுகிறாய்..! யா அல்லா...

ஹதீஸ் நூற்களின் வகைகள்

ஹதீஸ் நூற்களின் வகைகள்... ஹதீஸ் நூற்கள் பல வகைகளாக திரட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு வகைளான  தொகுப்புகளுக்கும் தனித்தனியான பெயர்கள் உள்ளன. 1)ஸுனன் : தொழுகை, நோன்பு போன்ற பாடத் தலைப்புகளின் கீழ் பலரும் அறிவிக்கும் ஹதீஸ்களை சில நல்லறிஞர்கள் திரட்டியுள்ளனர். இவ்வாறு அமைந்த நூற்கள் ஸுனன் எனப்படும். புகாரி, முஸ்லிம், அபூதாவூத். திர்மிதீ, நஸயீ, இப்னு மாஜா, தாரமீ, அல்முன்தகா, இப்னு  குஸைமா, இப்னுஹிப்பான், ஸுனன் ஸயீத் பின் மன்சூர், பைஹகீ போன்ற தொகுப்புகளை இதற்கு உதாரணமாகக் கூறலாம்). ஸஹிஹ் புகாரி, முஸ்லிம் ஆகிய நூற்களில் ஆதாரப்பூர்வமானவை மட்டுமே தொகுக்கப்படுவதை  தொகுத்தவர்கள் கொள்கையாகக் கொண்டிருந்ததால் அதை ஸுனன் என்று குறிப்பிடும் வழக்கம் இல்லை. அவற்றை "ஸஹீஹ்" என்றே குறிப்பிடுகின்றனர். இது போல் இப்னு ஹிப்பான் ஆகிய நூற்களும் இவ்வாறே ஸஹீஹ் என்று குறிப்பிடப்படுகின்றன.              2) முஸ்னத் : ஹழ்ரத் அபூபக்ர் அறிவித்த ஹதீஸ்கள், ஹழ்ரத் உமர் அறிவித்த ஹதீஸ்கள் என்று ஒவ்வொரு நபித்தோழரும் (ரலியல்லாஹு அன்ஹும்) அறிவித்த ஹதீஸ்களை ஒரு இடத்தில் திர...

உமர் பாரூக் ரழியல்லாஹு அன்ஹு ஆட்சியிலே

இஸ்லாமிய பேரரசின் ஜனாதிபதி உமர் ரலி யிடம் ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது கொலை செய்யப்பட்டவரின் மகன், பழிக்கு பழி வாங்குவதில் தீவிரமாக இருக்கிறார். குற்றம் சாட்டப்பட்டவர், தனக்கு இரண்டு நாள் அவகாசம் வேண்டும் "நான் ஒருவருக்கு காசு கொடுக்க வேண்டியுள்ளது. அதை திருப்பிக்கொடுத்து விட்டு, என் மகனை என் குடும்பத்தில் யாராவது ஒரு பொறுப்பானவரிடம் ஒப்படைத்து விட்டு வருகிறேன்" என வேண்டுதல் வைக்கிறார்... அதற்கு குற்றம் சாட்டியவர், "இல்லை இவர் நம்மை ஏமாற்றி விட்டு தப்பிக்க பார்க்கிறார்" என்கிறார்... "யாராவது ஒருவர் இவருக்கு பொறுப்பேற்றுக் கொண்டால், நான் இவர் போய் வர சம்மதிக்கிறேன்" என்றார்... உடனே, அபு தர் (ரலி) அவர்கள், “அவருக்கு தான் பொறுப்பு” ஏற்பதாக சொல்கிறார். அப்போது உமர், "அவர் ஏமாற்றி சென்றால் நீங்கள் தண்டனையை ஏற்க வேண்டும். நன்கு யோசித்து சொல்லுங்கள்" என அபு தரிடம் சொல்கிறார்... அபுதரும் தான் ஏற்றுக்கொள்வதாக சொல்கிறார்... தண்டனைக்குரிய நபருக்கு மூன்று நாட்கள் அவகாசம் கொடுக்கப்படுகிறது. மூன்றாவது நாள் அஸர் (மாலை) தொழுகைக்கு முன் ...

வலிமார்கள்வாழ்வினிலே

          உண்மையான இபாதாத் எது?    ஒரு தடவை இறைநேசப் பெண்மணி ராபிஅத்துல் பஸரிய்யா(ரஹ்) அவர்கள் ஒரு கையில் தீப்பந்தத்தையும் மறு கையில் தண்ணீர் வாளியையும் தூக்கிக் கொண்டு ஓடினார்கள். மக்கள் எங்கே செல்கிறீர்கள்..? என கேட்டார்கள். "சுவர்க்கத்தை எரிக்கப் போகிறேன் நரகத்தை அணைக்கப் போகிறேன்..!" என்றார்கள். "அன்னையே! எங்களுக்குப் புரியவில்லையே?" என மக்கள் சொன்னதும். "எல்லா முஸ்லிம்களின் மன நிலையை அல்லாஹ் எனக்கு காட்டித் தருகிறான்!" "ஒரு கூட்டம் சுவனத்தை அடைய வேண்டும் என்ற எண்ணத்திலேயே இபாதத் செய்கிறார்கள்!" "ஒரு கூட்டம் நரகத்தைப் பயந்து இபாதத் செய்கிறார்கள்!" "எந்த முஸ்லிமும் அல்லாஹுக்கு பயந்து.... அல்லாஹ்வை அடைய வேண்டும் என்ற ஆசையில் இபாதத் செய்யவில்லையே..!" என கவலையோடு சொன்னார்களாம்.

வலிமார்கள் வாழ்வினிலே

அன்னை நஃபிஸா ரழியல்லாஹு        தஆலா அன்ஹா  ஸய்யிதுனா_இமாம்_ஹஸன்_ரழியல்லாஹு_அன்ஹு_அவர்களின்_கொள்ளுப்_பேத்தியும் ஸய்யிதுனா_இமாம்_ஜஃபர்_ஸாதிக்_நாயகம்_ரழியல்லாஹு_அன்ஹு_மருமகளாருமான ஞானக்_கருவூலம்_காரணப்_பெருங்கடல்_அஸ்ஸய்யிதாநஃபிஸா_அல்_தாஹிராரழியல்லாஹூ_அன்ஹா_ புனித_உரூஸ்முபாரக்_ரமழான்_15 இவர்கள் அஸ்ஸய்யித் அல் ஹஸன் அல் அன்வர் பின் ஜைத் அல் அப்லஜ் பின் இமாம் ஹஸன் (ரிழ்வானுல்லாஹி தஆலா அலைஹிம்) மகள் ஆவார்கள். மற்றும் ஸய்யிதுனா இமாம் ஜஃபர் ஸாதிக் நாயகம் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் மகனார் ஸய்யிதுனா இஸ்ஹாக் அல்முஃதமின் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் மனைவியும் ஆவார்கள். ஞானப் பெருங்கடலான அன்னை நஃபிஸா ரழியல்லாஹு தஆலா அன்ஹா இமாம் ஷாஃபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் ஆசிரியையும் ஆவார்கள். மற்றும் பொருளாதார ரீதியில் அவர்களுக்கு அனுசரணையும் அளித்தவர்கள் அன்னை. இமாம் ஷாபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் அன்னையிடத்தில் பல ஹதீஸ்களையும், மார்க்கப் பாடங்களையும் கற்று உள்ளார்கள். அஹ்லுல் பைத்தினரிடத்திலும், அன்னையிடத்திலும் மிகப் பெரும் கண்ணியமும், நேசமும் கொண்டிருந்த இமாம...

குர்ஆன் மூலம் ஷிஃபா தேடுதல்

குர்ஆனுடைய வசனங்கள் ஒரு மனிதனின் நோயை குணப்படுத்துமா? என்ற சந்தேகம் நம்மில் பலருக்கும் உண்டு. நாம் நம்முடைய மனைவியிடமோ,குழந்தைகளிடமோ அல்லது குடும்பத்தினர்களிடமோ கோபமாகவோ சந்தோஷமாகவோ,அன்பாகவோ பேசும்போது யாரிடம் பேசுகிறோமோ அவர்களின் முகத்தில் அன்பையோ கோபத்தையோ நம்மால் காண முடியும். அன்பாக பேசினால் எதிரில் இருப்பவர்களின் முகம் அன்பாகவும் கோபமாக பேசினால் எதிரில் இருப்பவர்களின் முகம் கோபமாகவும் மாறுவதை நம்மால் காண முடியும். சாதாரண மனிதனின் வார்த்தைக்கே இன்னொரு மனிதனுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் ஆற்றல் இருக்குமென்றால் குர்ஆன் கலாமுல்லாஹ் அதாவது இறைவனின் வார்த்தை. இறைவனின் வார்த்தைக்கு எவ்வளவு வலிமை இருக்கும்? ஆனால் நமக்குதான் இவையெல்லாம் கேலியும் கிண்டலுமாக ஆக்கப்பட்டுவிட்டது وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ நம்பிக்கை கொண்டோருக்கு அருளாகவும், நோய் நிவாரணமாகவும் இக்குர்ஆனை இறக்கினோம். (அல்இஸ்ரா:82)
Image
                                Al quran

Ramzan 30 days 30 dua part -2

Image

Do you know this Powerful salawat

Image

Prophet isa(pbuh) recited this significant dua

Image

70,000 angels do dua for you

Image

A dhikr which is greater than any dikr in day and night

Image

பெருமானார் ஸல் அவர்கள் கூறினார்கள் 5வாசகம் உலகத்திற்காகவும் , 5வாசகம் மறுமைக்காகவும்

Image

அல்லாஹ் யாரை விரும்பிகின்றாநோ அவர்களுக்கு இந்த துஆவை கற்று தருகிறான்

Image

40 rabbana duas

Image

Ramzan 30 days 30 duas part-1

Image

Prophet Mohammed (saw) recite this ayat after thahajjath namaz

Image

Dua-e manjil, benefits of manjil

Image

How to pray taraweeh namaz

Image

Benefits of asmaul husna and asmaul husna with beautiful recitation

Image

Sura 78 al naba in arabic and tamil translation

Image

Benefits of bismillahir rahmanir raheem

Image

Miracle of ayatulkursi

Image

Shabe-bharat duas and dua nisf shaban

Image

Wazifa against evil eye and bad eye

Image

Wazifa for remove all problems, worries, sadness

Image

Wazifa for cure diabetes

Image

Wazifa for payoff from debt and loan

Image

Wazifa for peaceful sleep

Image

Wazifa for protect from enemies and rulers

Image

Wazifa for increase memory power

Image

Wazifa for get success in buisness

Image

Wazifa to see prophet Muhammad (saw) in dream

Image

Wazifa for longevity

Image

Wazifa for cure all diseases in tamil

Image

Wazifa for cure all diseases

Image

Wazifa for cure baldness

Image

Wazifa for beauty face and skin

Image

Wazifa for become rich and get wealthy

Image

Wazifa to increase love between husband and wife

Image

Wazifa for marriage soon

Image

Wazifa for become rich quickly

Image

Wazifa for job

Image

Wazifa for become millionaire

Image

Wazifa for cure headache

Image

Wazifa for money in tamil

Image

Wazifa for become pregnant

Image

Wazifa for corono virus

Image

Wazifa for become rich

Image